ஜெம் மருத்துவமனை முதல் முறையாக தென்னிந்தியாவில் லேப்பிராஸ்கோப்பி மூலம் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை


ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் மெதந்தா இணைந்து முதல் முறையாக தென்னிந்தியாவில்  கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை லேப்பிராஸ்கோப்பி முறையில் செய்துள்ளது. ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி முறையில் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை செய்தார். மெதந்தாவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாயின் நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 



கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் என்பவர் கல்லீரல் நோயால் 1 வருட காலமாக அவதிப்பட்டு வந்தார். இதில் அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு அவரது மனைவி ஷீபா மூலமாக தனது வலது பக்க கல்லீரலை தானமாக வழங்கினார். எனவே அவருக்கு லேப்பிராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஷீபா 4-5 நாட்களில் குணமடைந்து விட்டார். அவரது கணவர் இன்னும் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினார். 

இது குறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில்; வெளிநாடுகளில் 72-80 சதவீதம் வரை அதிக அளவில் உடலுறுப்பு தானம் மூலமாக லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இந்தவகையான உடலுறுப்பு தானத்தில் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு இரண்டு வகையாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றொன்று நெருங்கிய சொந்தங்கள் - வேறு பல காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களால் உறுப்பு தானம் செய்ய மேலை நாடுகள் போல் முன்வருவதில்லை. இதனால் இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தில் சொந்தபந்தங்கள் உறுப்பு தானம் அதிக அளவில் உள்ளது. கல்லீரல் தானம் செய்தால் 35-40 நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும் இத்தனித்தன்மை கல்லீரலுக்கு மட்டுமே உள்ளது. கல்லீரலை பெற்று கொண்டவர்களுக்கும் அக்கல்லீரல் 1-2 மாதங்களில் வளர்ந்து விடும். இதுபோன்ற கல்லீரல் தானம் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தெனிந்தியாவில் ஜெம் மருத்துவமனை முதல் முறையாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...