தை மாதம் முன்னிட்டு மருதமலையில் குவிந்த பக்தர்களால் வாகன ஓட்டிகள் அவதி


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோவில். முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலையில் ஆண்டுதொரும் எந்நாளும் பக்தர்கள் ஏராளமானோர் வழிபடச் சென்று வருவர்.

குறிப்பாக தை மாதத் திருநாட்களில் பக்கதர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்தே காணப்படும்.



இவ்வருடம் தை மாதத் திருநாட்கள் நடைபெற்று வருவதாலும் இன்று விடுமுறை நாள் (ஞாயிறு) என்பதாலும் ஆயிரக்கணக்கான முருகன் பக்தர்கள் மருதமலையில் குவிந்துள்ளனர்.

வாகனங்களில் மருதமலை முருகன் கோவில் செல்வோர்கள் மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் வழியிலேயே மேலே சென்று கோவிலுக்கு சென்றுவிடுவர்.

அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்த நிலையில் மருதமைலை முருகன் கோவிலின் மேற்பகுதியில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

குறிப்பாக, கார் உள்ளிட்ட வாகனமே அதிகமாக வந்துள்ளதால் மருதமலை முருகன் கோவிலின் அடிவாரத்தில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மருதலை கோவிலுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், தற்போது மேலே கோவிலுக்கு சென்றுள்ள வாகனங்கள் திரும்பி கீழே வந்தால் மட்டுமே கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள பக்தர்கள் மேல் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடியும்" என்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...