பாரதியார் பல்கலை.யில் பேராசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மாணவர்கள் சார்பில் மனு


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தரை பணி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி அப்பல்கலைக் கழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தர் கணபதியை பணி நீக்கம் செய்யக்கோரியும், அப்பல்கலைக் கழக முன்னாள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

தொடர்ந்து, புகார் அளிக்க வந்த முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் தெரிவிக்கையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்து இருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

பேராசிரியர் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டுமெனவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தரையும் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...