ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு


தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது இறுதிநாட்களில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் எம்.யுவராஜா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக் கோரியும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களால் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் ஒரு வார காலமாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சட்ட விரோத கும்பல் ஊடுருவிட்டதாகக் கூறி கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

எனவே, கோவை மாநகர காவல் துறை ஆணையர் கூறிய சட்ட விரோத கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், வன்முறை தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வேளை காவல்துறை தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களோடு மனித உரிமை ஆணையத்தை நாடுவோம். இதுகுறித்து சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளேன்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...