மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஒரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.



2017- 18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், தொழில் துறையினர் இந்த நிதிநிலை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ததாக தெரிவித்தார். 

நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

5 இலட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் தனிநபருக்கு வருமான வரியினை பாதியாக குறைத்து இருப்பதற்கும், சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு வருமான வரியினை 25 சதவீதமாக குறைத்து இருப்பதற்கும், மறைமுக வரியில் எந்த மாற்றமும் செய்யப்படாதது உள்ளிட்டவற்றிக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். 

மேலும் அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவுமெனவும் கூறிய அவர், மின்னணு பொருளாதாரத்தை ஊக்குவிக்க அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகத்திற்கென இந்த பட்ஜெட்டில் இரயில்வே தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், இந்த நிதிநிலை அறிக்கையில் ஜவுளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் இந்த நிதி நிலை அறிக்கை நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் எனவும், நீண்ட கால அடிப்படையில் தொழில் துறையினருக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஊரக பகுதிகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...