வன விலங்குகளை தாக்க வேண்டாம் என நீலகிரி மக்களுக்கு வன அதிகாரிகள் வேண்டுகோள்



நீலகிரி மாவட்டம் குன்னூர் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சவுந்தரராஜன், பாபு, விக்ரம், மணிகன்டன் ஆகியோர் இன்று வனவிலங்குகளை தாக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது பொது மக்களுக்கு தண்டோரா மூலம் குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகளான கரடி, காட்டுமாடு, சிறுத்தை, யானை போன்றவற்றை விரட்டவோ, அவற்றை கற்கள், நெருப்பு மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கவோ கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், வன விலங்குகள் ஊருக்குள் வந்தால் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் என்னும் பகுதியில் உள்ள மயானத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது.



மேலும், கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் குன்னூர் பகுதியில் காட்டு எருமை தாக்கியதில் ஒருவர் பலியானார்.

இவ்வாறு குன்னூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகளின் தாக்குதலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதையொட்டி மனித- விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும். வனத்துறையினர் காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது வனத்துறையினர் காட்டு விலங்குகளை கண்டால் தாக்கக் கூடாது என அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...