விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தும் பணி தீவிரம் : துணை ஆணையர் சரவணன் தகவல்


கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் பெருகி வரும் நிலையில், விபத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், விபத்துக்கள் நிகழ்வதை குறைக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரப்பகுதிகளில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதி கண்டறியப்பட்டு அங்கு எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள், வேகத்தடை போன்றவைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- 

கோவை மாநகரில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் எவை?  என்று கண்டறிந்து அப்பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, அவினாசி சாலையில் மிக அதிக விபத்துகள் நடப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக விபத்துக்கள் நடப்பது கண்டறியப்பட்டது. தற்போது அப்பகுதிகளில் சாலை ஓரங்களில் 'எச்சரிக்கை, விபத்துப்பகுதி' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டு வருகிறது. 

மேலும், குறிச்சி பகுதியில் வேகத்தடைகள் மற்றும் சாலையின் நடுவே டிவைடர்கள் அமைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும். 

காவல் துறை சார்பில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதோடு, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் விபத்துக்கள் வெகுவாக குறையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...