புனித ஜோசப் பாலிடெக்னிக் சார்பில் கோவை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்


கோவை மாவட்டம் வீரப்பனூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் இவ்வருடத்திற்கான கோவை மண்டல அளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.



இப்போட்டிகளின் இறுதியாக இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 2, 3) கோவை மண்டல அளவிலான தடகள போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், கோவை மண்டல அளவில் 36 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1100 பேர் கலந்து கொண்டனர்.

இதன் துவக்க விழாவானது இன்று சிறப்பு விருந்தினர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், இத்துவக்க விழாவில் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டுக் கொடியை சிறப்பு விருந்தினர் அறிமுகப்படுத்தினார்.



அதைத்தொடர்ந்து, கொடியேற்றுதல், சுடர் தீபம் ஏற்றுதல், உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.



புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ்.நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.செந்தில்நாதன் வரவேற்புரையும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜே.சுரேஷ் நன்றியுரையும் வழங்கினர்.

மேலும், நாளை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுக்கு கோவை மாநகர போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ்.சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதக்கங்களும், சுழற்கோப்பைகளும் வழங்கவுள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...