ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலைகளை மாநகராட்சி ஆணையர் (பொ) ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு சாலையில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில் "கோவை மாநகராட்சியில் 6 இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ். புரத்தில் டி.பி.சாலை மற்றும் திருவேங்கடசாமி சாலை, திவான் பகதூர் சாலை, சாய்பாபா காலனியில் என்.எஸ்.ஆர் சாலை, ரேஸ் கோர்ஸ் சுற்றுச்சாலை, சங்கனூர் மெயின் ரோடு, மசக்காளிப்பாளையம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக ஆரம்பகட்ட செயலாக்கமாக ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு சாலை (1.8 கிலோ மீட்டர்) மற்றும் திருவேங்கடசாமி சாலை (1.2 கிலோ மீட்டர்)யில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த மாதிரி சாலைகள் கண்டுள்ள வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, சென்டர் மீடியன் ஆகியவை குறியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், இந்த மாதிரி சாலைகளில் புட் பாத், மின்சார ஒயர்களுக்கான டிரென்ச் மற்றும் டக்ட், பி.எஸ்.என்.எல், தனியார் வடங்கள், வீடுகளுக்கான குடிநீர் பைப், டிராபிக் ரெகுலேசன் தொடர்பான போலீஸ் கேபில் லைன்கள், தெரு விளக்குகள், உயர்மட்ட கோபுர விளக்குகள் ஆகியவை செல்வதற்கான தனியான பொது டக்ட் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங், சிறப்பு நவீன கழிப்பிட வசதி, நவீனமயமான குப்பைத்தொட்டிகள், புதிய மரங்கள் நடுதல், சிறப்பு மாதிரி சாலைகளை ஒட்டி தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், சிறப்பு மருத்துவ உதவி மையம், ஜியோ டாகிங், ஒய்பை வசதி, வாகனத்தின் வேகங்களை கண்டறியும் கருவி, குடிநீர் வசதி, சுற்றுப்புற மாசு கண்டறியும் கருவி, அனைத்து வசதிகள் கூடிய ஸ்மார்ட் போல்ஸ், சாலைகளை கடக்கும் நடைபாதை வசதி, குறிப்பிட்ட இடவெளியில் மழைநீர் சேகரிக்கும் சிறப்பு ஆழ்துளைக் கிணறு அமைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் ஆகிய வசதிகள் இந்த மாதிரி சாலைகளில் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முதற்கட்டப் பணிகளான மாதிரி சாலைகளான ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி சாலைகளில் குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் தியாகராஜன், ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...