'பாரம்பரிய மாட்டு இனங்களை காப்பது நமது கடமை', கோவை கல்லூரி நிகழ்ச்சியில் கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு .


கோவை, தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், கோவை ரோட்ராக்ட் கிளப்  சார்பில் "தமிழ்நாட்டின் கால்நடை மற்றும் உயிரி பன்முகத்தன்மை கலாச்சார விளையாட்டு" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பல்லுயிர் பாதுகாப்பு குழுமத்தில் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'இந்தியாவில் முன்பு இருந்த மாட்டு இனங்கள் இன்று அழிந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களிலும் இன்ற பரவலாக இருக்ககூடிய மாட்டு இனம் 'ஜெர்சி'. ஜெர்சி இன மாடுகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வரவழைக்கப்பட்டு இனபெருக்கத்தின் மூலம் இன்று அதிகம் இந்தியாவில் பரவியுள்ளது. இவை அதிகம் பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. மேலும், 1945ம் ஆண்டு இரண்டாம் உலக போர் முடிந்த நிலையில் தற்பொழுது ரசாயனம் மூலமாகவும், பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும் அந்நிய பொருட்கள் இந்தியாவில் பெரும் இடத்தை பிடித்துள்ளது, இதுவே நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கடந்த மாதம் ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் புரட்சி மூலமாக இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் மீண்டும் களம் கண்டுள்ளது. இறுதி கட்ட போராட்டத்தில் நுழைந்த சில சமூக விரோதிகளால் தான் போராட்டம் திசை மாறியது. ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்திரமாக தமிழகத்தில் நடை பெற முக்கிய காரணம் மாணவர்கள் தான். இந்தியாவில் மற்றும் தமிழநாட்டில் உள்ள நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதும் நமது முக்கிய கடமை. அவ்வாறு பாதுகாத்தால் தான், நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு நம் பாரம்பரிய கால்நடைகளை கொண்டு சேர்க்க முடியும்', என்றார்.   



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...