தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் ஊற்றி அழிக்க முயன்ற தபெதிக-வினர் கைது


கோவை அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் ஊற்றி அழிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்களில் இந்தி எழுத்துக்களில் ஊர் பெயர்கள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதன்படி கோவையை அடுத்த நிலம்பூர் பகுதியில் சேலம்- கொச்சின் புறவழிச்சாலை மைல்கல்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்தின் போது மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி வந்து, இந்தி எழுத்துக்களை அழிக்க முயற்சித்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் காவல் துறை தடுப்புகளை மீறி இந்தி எழுத்துக்கள் மீது தார் ஊற்ற முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, இழுத்துச்சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் இணை மொழியாக இருக்குமென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்ததற்கு மாறாக, மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மத்திய அரசின் நலத்திட்டங்களில் இந்தியை திணித்து வருவதாக கூறிய அவர்கள், மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...