பள்ளி, கல்லூரிகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆவின் ஒன்றியத் தலைவர் ப.வெ.தாமோதரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், ஆவின் நிறுவனம் இலாபம் நோக்கமில்லாமல் இயங்கும் ஒரு கூட்டுறவு நிறுவனம் ஆகும். நேரடியாக விவசாயிகளிடமிருந்து பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட பால் மாவட்ட பண்ணைகளுக்கு நேரடியாக அனுப்பபடுகிறது.

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனிலும் உடல் ஆரோக்கியத்தையும் மையாமாக்க கொண்டு 3 சதவிகிதம் குறைந்த அளவு கொழுப்புச்சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்திய பால், 6 சதவிகிதம்  கொழுப்புச் சத்துள்ள நிறை கொழுப்புப்பால் என மூன்று வகையான பால் நுகர்வோர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனையை அதிகபடுத்தும் நோக்கில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் ஆவின் மூலம் தரமாகவும் நுகர்வோர் பயன்பெரும் வகையில் கடைகள் அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆவின் மூலம் கடைகள் அமைக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு பால், நெய், வெண்ணெய், ஐஸ்கிரிம், பன்னீர் போன்ற பொருட்கள் விற்பணை செய்யும் பொருட்டு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் சுமதி, துணை பொது மேலாளர் (விற்பனை) ரமேஸ்குமார், உதவி பொது மேலாளர் சக்கரவர்த்தி (தரக்கட்டுப்பாடு), ராஜேஸ் (பண்ணை) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...