நெருக்கடியைக் கண்டித்து ஒரு நாள் முழுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பல்வேறு நெருக்கடியான வேலைப் பணிகள் விதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், தமிக அரசால் அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு இத்துறையைச் சார்ந்தவர்களையே அதிகமாகவும், நேர வரையரை இன்று வேலை வாங்குவதாகவும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து, மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்காமல், பதிவேடுகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவதாகவும், அதனை எழியமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் கழிப்பறை, கால்நடை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்கள் துறை ஊழியர்கள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைப்பழுவை மட்டுமே தினித்து வருவதாகவும், அரசு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் கூட்டம் அல்லது நிகழ்ச்சி வைத்து ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைப்பதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இத்தகைய ஊழியர் விரோதப் போக்கை தடுக்கக்கோரி இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...