'கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை' சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் விளக்கம்.


சின்னமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்குமார், 35, தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதனை அடுத்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹனீபா, 78 என்ற முதியவரும் தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் 30 க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு, தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார துறையினர் உயிரிழப்பு இல்லை என்றே கூறி வருகின்றனர்.

இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஓ. பானுமதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறும் பொது "கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை. அரசு மருத்துவமனையில் பல்வேறு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழப்போர் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் 68 பேர்  சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதில் நேற்று 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதார துறையில் போதுமான மருந்துகள் கைவசம் உள்ளன. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...