பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து கோவை வட்டாசியர் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


30 ஆண்டுகளாக பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவையில் செயல்பட்டு வந்த நவஇந்தியா நிறுவனம், நிர்வாக குறைபாடு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை வழங்காததால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் 50 சதவிகித பணிக்கொடை வழங்கப்பட்டது. அதன் பிறகு வழங்க வேண்டிய மீதம் 50 சதவிகித தொகையை இது வரை வழங்காமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்துவதை கண்டித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நவஇந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 180 ஊழியர்களுக்கு இது வரை முழுமையான பணிக்கொடை வழங்கவில்லை. அதில் சில ஊழியர்கள் தற்போது இறந்துவிட்டதால் அந்த தொகையை அவர்களது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கைகளை ஏற்று நவஇந்தியா நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...