தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - பரபரப்பு!

தாராபுரம் அருகே உள்ள ஐந்து சாலை பகுதியில் இருந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகிலுள்ள கரூர் சாலையில் அமராவதி ஆற்றங்கரையில் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த பகுதி வழியாக தினந்தோறும் சுமார் ஒரு நாளைக்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில் தாராபுரத்தில் வாழும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் குப்பை கழிவுகள் மற்றும் தாராபுரத்தில் இயங்கும் உணவகங்கள், இறைச்சி கடைகள் பல்வேறு வியாபார கடைகளில் குப்பை கழிவுகளை தினமும் சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள்.

வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் இந்த குப்பைகள் இயற்கையாகவே தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் 2 மதுபான கடைகள் இருப்பதால் இரவு நேரங்களில் அங்கே அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள் தீ வைத்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் அந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் குப்பைகள் கொழுந்து விட்டு எரிந்தது.



இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



தாராபுரத்தில் சாலை ஓரங்களில் அடிக்கடி இது போன்று நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நோய் தொற்று உருவாகுவதால் மேலும் இது போல் நடக்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...