கோவை பச்சாபாளையம் மின் பிரச்னையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை!

கோவை பச்சாம்பாளையம் ஜெகன்நாதன் நகரில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. கிராமத்தில் மின் பிரச்னை உள்ளதால், மின்சார வாரியம் அல்லது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மின்பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பச்சாம்பாளையம் பகுதியில் நிலவும் மின் பிரச்சினையை சரிசெய்யும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை பச்சாப்பாளையம் பகுதியில் ஜெகன்நாதன் நகர் உள்ளது. இங்கு 25,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் பல்வேறு சிறு,சிறு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இங்கு கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக மின்சார பிரச்னை (Low Voltage) இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதியில் மின்சார பிரச்னை (Low Voltage) நிலவி வருகிறது. குறிப்பிட்ட நேரம் சீராக மின்சாரம் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென fluctuation ஏற்படும். Low Voltage ஆகிவிடும்.

இதனால் வீட்டில் உள்ள மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, கிரைண்டர் ஆகிய பொருட்கள் அனைத்தும் பழுதாகி விடுகின்றன.

அதுமட்டுமின்றி நிறுவனங்களில் உள்ள விலை உயர்ந்த இயந்திரங்களும் பழுதாகி விடுகிறது. இதனால் அடிக்கடி பழுதான இயந்திரங்களை சரிசெய்யும் சூழல் ஏற்படுவதால், பணம் அதிகம் செலவாகிறது. மேலும் தொழிலும் பாதிக்கப்படுகிறது. இங்குள்ள பலரும் சிறு, சிறு தொழில் நிறுவனங்களை வைத்து நடத்தி வருபவர்கள் தான்.

கொரோனா காலத்திலேயே பெரும் நஷ்டத்தை சந்தித்த அவர்கள் தற்போது இந்த மின்சார பிரச்னைகளால் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பேரூர் மின்சார வாரியத்தில் புகார் மனுக்கள் அளித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

மின்சார பிரச்னை ஏற்பட்டால் ஒவ்வொரு முறையும் மின்வாரிய பணியாளர்களை அழைத்து அதனை சரி செய்கிறோம். ஆனால் மீண்டும் அந்த பிரச்சனை தொடர்ந்து ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் சில நிறுவனத்தினர் அவர்களது நிறுவனத்தை மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து அப்பகுதியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிலும் புகார்கள் அளிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாகவும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித பயனும் இல்லை. எனவே தங்கள் பகுதிக்கு கூடுதலாக டிரான்ஸ்பார்மர் இணைப்பு இருந்தால், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மின்சார வாரியம் அல்லது மாநகராட்சி நிர்வாகம் தங்கள் பகுதியில் நிலவும் மின்சார பிரச்சினையை போக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மேலும் தங்களது பிரதான கோரிக்கையான புதிய கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...