ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குக - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தாராபுரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சளி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வாறு உடல் நிலை சரியில்லாத போது இவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் நேற்று முன்தின நிலவரப்படி 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலர் மர்ம காய்ச்சலுக்கு இறந்ததாக மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் காரணமாக கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே அரசு உடனடியாக கொரோனா பரிசோதனைகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைகளை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...