உடுமலை தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் விழா அனுசரிப்பு!

உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில், நடைபெற்ற தீ தொண்டு நாள் வார விழாவில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட தீயணைப்பு துறையினர், தீவிபத்தை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


திருப்பூர்: உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு துறையினர் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.



மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



பின்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகை பிடிக்க கூடாது.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீ விபத்தினை தவிர்க்க கூடிய வழிகள் குறித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழா வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...