கோவையில் அரசு பொருட்காட்சி - ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் 45 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ள அரசு பொருட்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவையில் 45 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்தாண்டு அரசு பொருட்காட்சி கோவை மாநகராட்சி சிறை சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை உட்பட 27 அரசு துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செலுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாடு மின்சாரம் வாரியம் கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட 7 அரசு சார்பு நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளது. இப்பொரு காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வழங்க உள்ளனர், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...