தர்பூசணி விளைச்சல் பாதிப்பு - உடுமலை விவசாயிகள் கவலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெயில் காரணமாக இந்த சீசனில் தர்பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. கொள்முதல் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில், தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக, மேட்டுப்பாத்தியில், நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து, விதைகளை நடவு செய்கின்றனர்.



செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகின்றனர். இதனால், ஏக்கருக்கு 20 டன் வரை தர்பூசணி விளைச்சல் கிடைத்துவருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல், தர்பூசணி விளைநிலங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில், சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை தொடங்கியுள்ளது.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, தர்பூசணியை கிலோ, 12 – 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு 2 டன் வரை விளைச்சல் குறைந்துவிட்டது. சாகுபடி செலவு அதிகரித்து நிலையில், விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும், என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...