புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க வாய்ப்பு - கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குவது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், அரசு-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்குதல் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு www.nimionlineadmission.in/iti என்ற இணையதளத்தில் வருகிற 25.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்தபட்சம் 4 தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

4 தொழிற்பிரிவுகளுக்கு குறைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்கிடவும், தொழிற்பயிற்சி நிலையங்கள் இடமாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...