இரும்பு உருக்காலையை எதிர்த்து 35வது நாளாக காத்திருப்பு போராட்டம் - உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது!

பல்லடம் அருகே இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி 35வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டியில் உள்ள இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பழைய இரும்பு பொருட்களை உருக்கும் இரும்பு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி அனுப்பட்டி கிராம மக்கள் கடந்த 35 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் பல்லடம் வட்டாட்சியர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் ஆலை முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக கிராம மக்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆலையை தற்காலிகமாக மூடக்கோரி பல்லடம் வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.



இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதாகவும் நீர்நிலைகள் மாசு அடைவதால் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 35 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தும் ஆலை இயங்குவதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வடுகபாளையத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.



இந்த நிலையில் வடுகபாளையம் நால் ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று மாஸ் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட நான் இருக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

தனியார் இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்று கைதானவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் தனியார் மண்டபத்திலேயே காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறியும் கிராம மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

மேலும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், காவல்துறை அதிகாரிகளுடன் மட்டும் பேசிவிட்டு எங்களை சந்திக்காமலேயே கிளம்பியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...