கோவை துடியலூரில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவை துடியலூரை அடுத்த வடமதுரையில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.



கோவை: துடியலூர் பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோவை துடியலூரை அடுத்த வடமதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

குருடம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுரேஷ் குமார் மற்றும் சாவித்திரி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நீர்மோர் பந்தல் தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இருக்கும்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூறும்போது, இந்த வருடம் வெயில் அதிகமாக உள்ளது. மேலும் 4 டிகிரி வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக வானிலை துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் பயன்படும் வகையில் நீர்மோர் பந்தலை பாரதிய ஜனதா கட்சியினர் திறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நீர்மோர் பந்தலில் மோர் குடித்து தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...