சென்னை தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வருகின்ற 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எழுகாம்வலசு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோனேரிப்பட்டி, பொன்னிவாடி, எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.



இந்த அணை கட்டுவதற்கு நஷ்ட ஈடாக ஒரு ஏக்கருக்கு 9000 மானாவாரி பூமிக்கும் ஒரு ஏக்கர் தோட்ட பூமிக்கு 27000 நஷ்ட ஈடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்படி தொகை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து நஷ்டஈடு தொகை அதிகம் பெறுவதற்கு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மானாவாரி பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாயும் தோட்ட பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாயும் மேற்படி தொகைக்கு 15 சதவீத வட்டியும் ஆறுதல் தொகை மற்றும் கூடுதல் சிறப்பு தொகை மற்றும் செலவு தொகையை வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை 120 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்காததால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் வருகின்ற 13-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 120 விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...