கோவை அருகே பக்தர்களின் வாகனத்தை வழிமறித்து நின்ற காட்டுயானை கூட்டம் - வைரலாகும் வீடியோ!

கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்றபோது, வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.



கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவர். சில சமயங்களில் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இரவு நேரங்களில் மலையேற கூடாது என தெரிவித்தால் இரவு முழுவதும் மலை அடிவாரத்திலேயே தங்கி விட்டு அதிகாலையில் மலையேறுவர்.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்று கொண்டிருக்கையில், வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன.

வாகன ஓட்டிகளும் யானைகளுக்கு தொந்தரவு அளிக்காமல் இருக்க ஒலிபெருக்கிகளை எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்.



சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானைகள் சாலையிலேயே நின்றுள்ளன. இதனையடுத்து வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனிடையே ஜீப்பில் இருந்த ஒருவர் அவரது செல்போனில் யானைகளை வழிமறித்து நின்றதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்வதால் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க, வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...