ரமலான் பெருநாளை ஒட்டி துடியலூரில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை!

ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.



கோவை: ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூரில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ரமலான் பெருநாள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு வைத்து இன்றைய தினம் ஷவ்வால் பிறை 1 ல் கொண்டாடப்படும். இந்த பெருநாளானது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் ஓர் சிறந்த பண்டிகை ஆகும்.



ஈதுல் பித்ரு தொழுகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் சூழலில், கோவை மாவட்டம் துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ். கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் என சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.



துடியலூர் பள்ளிவாசல் செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகைக்கு இமாம் சாஹிர் ஜைனி தொழுகவைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இமாமிற்கு பள்ளிவாசல் தலைவர் சுல்தான் மைதீன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் பொருளாளர் கனி மேற்பார்வையில் நடைபெற்றது.



மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சுற்று வட்டார பகுதி இஸ்லாமியர்கள் மார்க்க அறிஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்கள் தொழுகையை நிறைவேற்றி அதன் பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டி அணைத்து பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...