கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய மர்மநபர்கள் - மடக்கிப்பிடித்து இளைஞர்கள் அதிரடி!

கோவை வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்துவந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்களை, உள்ளூர் கிராமத்து இளைஞர்கள் மடக்கிப்பிடித்து, கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் எடுக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கேரளாவில் இருந்து எடுத்துவரப்படும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் அண்மைக்காலமாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

குறிப்பாக, கோவை வாளையாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, பலமுறை எழுந்த புகார் அடிப்படையில் காவல் துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.



இந்நிலையில், கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த மர்ம நபர்கள், வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டியுள்ளனர். இதனைக் கண்ட உள்ளூர் இளைஞர்கள், அந்த நபர்களிடம் குறித்து கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர்.



இதையடுத்து, அந்த இளைஞர்கள், ஊர் மக்களையும் அழைத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பதாகக்கூறி எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, அந்த நபர்கள் மீண்டும் கோழி கழிவுகளை அள்ளி ஆட்டோவில் திரும்ப எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், ஆட்டோவில் கோழி கழிவுகள் எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...