தாராபுரத்தில் வருமானவரித்துறை அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை!

தாராபுரத்தில் வருமானவரித்துறை அலுவலர் ராஜதுரை என்பவரின் வீட்டை கள்ளச் சாவி போட்டு திறந்து ரூ 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், இந்த கொள்ளை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை மெட்ரோ சிட்டி அருகே உள்ள என். ஆர். எஸ் நகரில் குடும்பத்துடன் வசிப்பவர் ராஜதுரை (வயது35). தாராபுரம் விற்பனை வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது32), மகன்கள் மித்திரன் (வயது7), ரண மித்திரன் (வயது4) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் பண்டிகைக்காக மூன்று நாள் கிடைத்த விடுமுறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டனர்.



நேற்று மாலை அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்படாமல் திறந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைத்து எடுக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள், வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த ரூ 5ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் வீடு மற்றும் பீரோவின் கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.



இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் ராஜதுரை புகார் செய்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், ராஜதுரையின் வீட்டை அடுத்து இருபுறமும் உள்ள முத்துலட்சுமி மற்றும் கிருபாகரன் ஆகியோரது வீடுகளிலும் கொள்ளையர்கள் புகுந்து பொருட்களை தேடி உள்ளனர். ஆனால், இரு வீட்டிலும் யாரும் இன்றி காலியாக இருந்ததால் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...