தாராபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தாராபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டுகள் பழமையான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் மையப் பகுதியான சின்னக் கடை வீதியில் நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் பிரமாண்டமாக துவங்கியது. தொடர்ந்து விசேஷ பூஜைகள் அந்தரயாகம், வேதிகார்ச்சனை, மூல மந்திரம், ஹோமம், திரவி ஆகுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதில், 64 வகையான மூலிகை திரவியங்கள் 12 புண்ணிய நதிகளின் மகா தீர்த்தங்கள், கலசங்களில் எடுத்து வரப்பட்டு மருதுரை பட்டீஸ்வர ஸ்வாமி ஆலய அர்ச்சகர் மந்த்ராச்சல சிவாச்சாரியார் தலைமையிலான 12 சிவாச்சாரியார்கள் அடங்கிய குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.

தொடர்ந்து இன்றைய தினம், ஜகத்குரு சிருங்கேரி சாரதா பீடம் பாரதி தீர்த்த சுவாமிகளின் நல்லாசியுடன் தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபையின் கௌரவ தலைவர் ராஜா ராமலிங்கம், தலைவர் சுப்பிரமணி, பெடரேஷன் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.



இதன்படி, காலை 9:00 மணிக்கு புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அம்மன் சன்னதி கோபுரம் உள்ளித்தவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனை பயபக்தியுடன் வணங்கி வந்தால் தடைபட்ட திருமண காரியங்கள், மனதுக்குப் பிடித்த வரன்கள், குடும்ப ஆரோக்கியம், கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளில் அபரிமிதமான முன்னேற்றம் ஆகியவை நிச்சயம் நடைபெறும் என்பது ஆண்டாண்டு கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.



சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் ஆன்மீகம் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...