உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

மழைப் பொழிவு இல்லாததால் கடந்த சில மாதங்களாக உடுமலை அடுத்த பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில், நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ளது பஞ்சலிங்க அருவி. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வன பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.

வனப் பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கிறது. வன பகுதியில் ஓடி வருகின்ற ஆறுகள் பஞ்ச லிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது.

வனப்பகுதியில் சிதறி கிடக்கும் பல்வேறு விதமான மூலிகை சருகுகள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் கரைந்து விடுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் சுவற்றை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்தது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த சூழலில் நேற்றைய தினம் அருவியின் நீராதார பகுதிகளில் திடீரென மழை பெய்தது.



இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க வந்து ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...