கோவை மாவட்ட வங்கிகளுக்கு நடப்பாண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான கடன் திட்டப் புத்தகத்தை வெளியிட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, 2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டத்திற்கு 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்ட வங்கிகள் 2023-2024ஆம் ஆண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டார்.



இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சோபித் அஸ்தானா, நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் திருமலா ராவ், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது,

ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிக பட்சமாக 35,170 கோடிக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 15,000 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு 18,850 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு 1320 கோடி என மொத்தம் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7470 கோடி அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து RSETI யில் பயிற்சி பெற்ற 5 நபர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...