தூத்துக்குடியில் விஏஓ படுகொலை - தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் மணல் கொள்ளை தொடர்பாக புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் முறப்பநாடு கோவில் பத்து என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

இவர் மணல் கடத்தியவர் மீது நடவடிக்கை எடுத்தபோது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் அலுவலகத்தில் புகுந்து அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் விவேக் முன்னிலை வகித்தார். அப்போது கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அஞ்சலி செலுத்தினர். அரசாங்க சொத்தை காப்பாற்றுவதற்கு அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

தவறு நடந்தால் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி தாசில்தார், சப்- கலெக்டர் என்ற அளவில் புகார் அளிக்கலாம் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும், கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் வட்டத்தில் உள்ள 50 கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...