திருப்பூரில் 40 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் அனுமதி மீறி கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் அனுமதி மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே சத்யா ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமாக வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.



இந்த கட்டிடம் 40 கடைகளுடன் கூடிய வர்த்தக கட்டிடமாக கட்டப்பட்டு வந்த நிலையில், மேற்படி கட்டிடம் அனுமதி பெற்றதற்கு மாறாக கட்டப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.



இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அந்த கட்டிட வளாகத்திற்கு சீல் வைத்தனர். 40 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.



திருப்பூரில் ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...