கோவையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.39.30 கடனுதவி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.


கோவை: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இக்கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குநர் ராமச்சந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஊரக தொழில்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கவும், உலக வங்கி நிதியுதவுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் காரமடை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சர்க்கார் சாமக்குளம் ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



புதிய தொழில்களை உருவாக்கவும் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும் 30% இணை மானியத்துடன் கூடிய கடன் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 இலட்சம் மதிப்பிலான 30% இணை மானியத்துடன் (11.79 லட்சம்) கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...