கோவையில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவர் கைது!

கோவையில் உயர் ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட முகமது ஷானித் எனும் தனியார் கல்லூரி மாணவரை துடியலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 12 கிராம் எடைகொண்ட உயர்ரக (methamphetamine) போதைப்பொருளையும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோபயாலஜி படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர், துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த மாணவரை போலீசார் கண்காணித்து வந்தனர். பெங்கலூர் சென்றிருந்த மாணவர், துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதிக்கு வந்தபோது, போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் (methamphetamine) என்ற உயர் ரக போதை பொருள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அஷ்ரப் என்பவரது மகன் முகமது ஷானித் (வயது22) என்பதும், இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோபயோலஜி நான்காம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், முகமது ஷானித் பெங்களூருக்கு சென்று அங்கிருந்து (methamphetamine) என்ற உயர் ரக போதை பொருளை வாங்கி வந்து, கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்பிளான 12 கிராம் (methamphetamine) போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் யார்? பெங்களூரில் இருந்து மாணவர்களை தொடர்பு கொள்வது யார்? என்பது குறித்த விசாரணையை கோவை மாவட்ட போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...