பல்லடம் அருகே 16 ஆண்டுக்குப்பின் நடந்த கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களுக்கான கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் புதூர் கிராமத்தில் அருள்மிகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களும் புரனமைப்பு செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

கடந்த 24 ஆம் தேதி தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி எடுத்து விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேகப் பெருவிழா தொடங்கியது.



அம்பிகைக்கு முதற்கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, யாகசாலையில் இருந்து கோபுர கலசத்திற்கு தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின், மூலவர் சிலைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...