வால்பாறையில் சத்துணவு சாப்பிட்ட 21மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு சத்து மாத்திரையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை சாப்பிட்ட ஒரு சில மாணவர்களுக்கு மாலை 3 மணி அளவில் லேசான தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டு உள்ளது.



இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஆட்டோ மற்றும் தனியார் வாகனம் மூலம் 21 குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும் சில தினங்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாகவும், அதை குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...