உடுமலை தனியார் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது

உடுமலையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் ரூ.4லட்சம் பணத்தை கொள்ளையடித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிரபாகரனை(29) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் தனியார் நிறுவனத்தில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (32). இவர் உடுமலை எலைய முத்தூர் பிரிவில் அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி இரவு வேலையை முடித்துக்கொண்டு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ.4 லட்சத்து12 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பாலாஜி உடுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த பிரபாகரன் (29) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் அடங்கிய பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...