கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போன் பறிப்பு - இளைஞர்கள் 3 பேர் கைது!

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஷேக் மொய்தீன் என்பவரை கத்தியால் தலையில் தாக்கிவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள் மூவரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகேயுள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மொய்தீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து அவரது செல்போனை கேட்டுள்ளனர்.

அப்போது அவர் செல்போனை தர மறுத்ததால், அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் ஷேக் மொய்தீன் தலையில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்த ஷேக் மொய்தீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதனிடையே ஷேக் மொய்தீன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், ஷேக் மொய்தீனை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கவுண்டம் பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியைச் சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...