கோட்டை மாரியம்மன் கோவில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு - பாஜக ஆர்ப்பாட்டம்!

மடத்துக்குளம் அருகிலுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு விடும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பிரபு தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகிலுள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை டெண்டரை தனியாருக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கையை தனியாருக்கு டெண்டர் விடும் கொழுமம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்டச் செயலாளர் தெய்வக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பு, மாவட்ட ஐடி பிரிவு தலைவர் குணசேகர் , உடுமலை வடக்கு ஒன்றிய தலைவர் நாகமாணிக்கம், உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் மணியன் உள்ளிட்ட மாநில மாவட்ட மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...