நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியா? - கமலஹாசன் பதில் என்ன?

கோவை - அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை, சேலம் மண்டல பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக கூட்டத்திற்கு பின் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.


கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை - அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு இது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கின்றோம், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும்.

பெங்களூருவுக்கு பிரச்சாரத்திற்கு செல்வது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும். இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம், என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம்.

சட்டமன்றத்தில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெற திட்டமா என கேள்வி எழுப்பியதற்கு, இருக்கலாம் அது நல்ல எண்ணம் தானே என பதிலளித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...