13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - உடுமலை இளைஞருக்கு 20 ஆண்டு சிறை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உடுமலையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது21). கடந்த 2022ம் ஆண்டு இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கோகுலகிருஷ்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்புக்கு பின், கோகுலகிருஷ்ணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...