மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ - கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை

மதிமுகவுக்கு எதிராக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்கு பதிலடியாக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு, துரைவைகோவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக அவைத் தலைவர் துரைசாமி , வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் மதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ. அவரால் அவருக்காக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் மறுமலர்ச்சி திமுக. அந்த இயக்கத்தை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கச் சொல்ல பெரியவர் துரைசாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

திமுக கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக வை ஆதரித்து பேசியவர் இது போன்ற இழிவான அருவருப்பான அரசியலை இனியாவது கைவிட வேண்டும்.

இயக்கத்தை பிளவு படுத்த நினைத்த தீய சக்திகள் தமிழகம் முழுவதும் ஆளுகிற ஆண்ட இயக்கங்களுக்கு இணையாக வீறு கொண்டு நடைபெறுகிற மறுமலர்ச்சி திமுக ஐந்தாவது அமைப்பு தேர்தலால் நிலைகுலைந்து போயிருக்கிறது.

அதன் வெளிப்பாடே பெரியவர் துரைசாமியின் பேட்டி. தலைவர் வைகோ அவர்களின் வழிகாட்டுதலில் எங்கள் கோவை மாநகர் மாவட்ட மதிமுக பயணம் தொடரும். நம்மவர் துரை வைகோ அவர்களின் கருத்தை ஏற்று இதை கடந்து செல்வோம்.

இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...