திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் - தாராபுரம் அருகே போலீசாரால் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருட்டு வழக்கில் மதன், லோகேஸ்வரன் என இருவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த சுமதி என்கிற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து மூன்றே கால் பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35).

இவருடைய மனைவி சுமதி (வயது31). அதே பகுதியில் வசிக்கும் நண்பர் லோகேஸ்வரன் (வயது35).

இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள வழக்கறிஞர் வீட்டிலும், நஞ்சம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் சாமி கழுத்தில் இருந்த மாங்கல்யத்தையும் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35) மற்றும் இவருடைய நண்பர் லோகேஸ்வரன் (வயது35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மனைவி சுமதியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சுமதியை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சப்-இன்ஸ்பெகடர் கருப்பு சாமி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமதி கழுத்தில் நகை அணிந்து இருந்தார். அது திருட்டு நகைதான் என தெரியவந்தது.

இதையடுத்து, சுமதியை கைது செய்து, அவர் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைதான சுமதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...