அதிமுக நிர்வாகி வீட்டின் முன்பு விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம் - ரூ.1.10 கோடி பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிக்கும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயி தமது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் தினேஷ் மற்றும் லோகேஸ். இவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் மூலனூர் நத்தப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டின் முன்பு நேற்று அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இது குறித்துப் பேசிய ராமகிருஷ்ணன், “மூலனூரில் கோழி தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர் தொழில் ரீதியாக என்னிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் பெற்றுள்ளார்.



ஆனால், அந்த பணத்தை 4 ஆண்டுகள் கடந்தும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே, குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறேன். தரவேண்டிய ரூ.1 கோடியே 10 லட்சத்தை திருப்பி தரும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...