மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் - தாராபுரத்தில் ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக மற்றும் சின்னமலை குரூப்ஸ் இணைந்து ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தியது. இதனை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சோமனூரில் இருந்து மண்டலபுதூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரம் ஒன்றிய திமுக சின்னக்கம்பாளையம் பேரூர் கழக திமுக மற்றும் சலாம் பாளையம் சின்னமலை குரூப்ஸ் இணைந்து நடத்திய 14 ஆம் ஆண்டு ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், போட்டியை கொடியசைத்து தொடங்கி துவக்கி வைத்தார். தாராபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றிய தலைவருமான எஸ் வி செந்தில் குமார், கோவை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ரேக்ளா சங்கத்தின் தலைவருமான பிரகாஷ் சின்னக்கம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.



200 மீட்டர் 300 மீட்டர் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில், பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழனி தாராபுரம் குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.



நிர்ணயிக்கப்பட்ட தூரங்களை குறிப்பிட்ட குறைவான மணித்துளிகளில் சென்றடையும் முதல் மூன்று காளை மாடுகளுக்கு தங்க காசுகள் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, சாலையில் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளுக்கு பின்னால் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி கண்டு ரசித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...