கோவையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடிவிட்டு சிக்கிய பெண் - வைரலாகும் வீடியோ

கோவை காந்திபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் முகக்கவசம் அணிந்தபடி வந்த ஜோடி, நூதன முறையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விற்பனையாளர் உரிய நேரத்தில் கவனித்ததால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் கடையில் கடையில் விஷ்ணு என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை கடைக்கு வந்த மாஸ்க் அணிந்து வந்த இளைஞர் மற்றும் ஒரு பெண் கம்பியூட்டர் மவுஸ் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அந்த நேரத்தில், அவர்கூட வந்த அந்தப் பெண்மணி டிஸ்ப்ளே-வில் வைக்கப்பட்டுள்ள லேப்டாப் எடுத்து தனது பேக்கில் வைத்துள்ளார்.



இதனைப் பார்த்த விற்பனையாளர், அந்த லேப்டாப்பை கொடுத்து விடுங்கள் என பெண்ணிடம் கூறினார். இதையடுத்து, பையில் இருந்த லேப்டாப்பை அந்தப் பெண் திரும்பக் கொடுத்தார். பின்னர் இருவரும் எந்த பொருளையும் வாங்காமல் அந்த கடையை விட்டு சென்று விட்டனர்.



சரியான நேரத்தில் விற்பனையாளர் விஷ்ணு கவனித்தால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது. இந்த நூதன கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...