மே தினத்தையொட்டி கோவையில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்பு!

மே மாதம் 1ஆம் தேதியான இன்று தொழிலாளர் தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த இடிகரை போளுவாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சியின் தலைவர் அம்பி என்கிற சதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம வளர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் நடைபெற்று முடிந்த பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை திருமணம், திறந்தவெளி கழிப்பிடம் கூடாது என மாவட்ட ஆட்சியர் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



இதனையடுத்து கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் அலமேலு மங்கை, ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...