பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள், லாரி ஓட்டுநர்களுக்கு தர்பூசணி பழம், குடிநீர், மோர் வழங்கப்பட்டன.


திருப்பூர்: பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று மே தினத்தை ஒட்டி கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.



கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.



பொதுமக்களுக்கு வெயில் காலம் முடியும் வரை தர்பூசணி பழம், குளிர்ச்சியான மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...